Friday, February 17, 2012

உள்ளத்தில் உள்ளது கவிதை!


நேர்மையோ டிருத்தல்;நாளும்
நேர்வழி  நடத்தல்;புத்திக்
கூர்மையோ டுழைத்தல்; எங்கும்
பொய்மையை எதிர்த்து நிற்றல்

இவை என்றன் கொள்கையாக
இறை எனைப் படைத்த தாலே;
அவை என்றன் கவிதை  என்று
அளிக்கின்றேன்;உணர்வ தாரோ?

     இவண்-
     கிருஷ்ணன்பாலா
          17.2.2012

2 comments:

  1. ''.பொய்மையை எதிர்த்து நிற்றல்”....ரெம்பக் கஷ்டம்.இது..
    வேதா.இலங்காதிலகம்.

    .

    ReplyDelete
  2. இவ்வாறு சொல்லிக் கொண்டு அமைதியாக இருந்து விடுவது கூட பொய்ம்மைக்குத் துணை நிற்பது போலாகி விடும்; அவ்வாறு நிற்க விரும்பாமல்தான் எனது வாழ்க்கையைத் துறக்க நேர்ந்தது. அதனால்,நான் தனி மனிதனாக இருக்க நேர்ந்த போதும் அதை எனது தகுதி என ஏற்றுக்கொண்டுதான் எழுதுகிறேன்; வாழ்கிறேன், உதாராணத்தைத் தேடிப் போக வேண்டியதில்லை,
    -கிருஷ்ணன்பாலா 9.3.2012

    ReplyDelete